Monday, June 16, 2008

சிந்திப்போம் சந்திப்போம்

அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம்!

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்


மேற்கண்ட திருக்குறளுக்கு இணங்க மீண்டும் சந்திக்கும் பொது மகிழ்வுடன் கலந்துரையாடுவதற்கான கருத்துகளை தயாரித்துக்கொண்டு சந்திக்க வேண்டும். இது என் அன்பான வேண்டுகோள். அதனால்தான் "சிந்திப்போம் சந்திப்போம்" என்று என் வலைப்பூவிற்குப் பெயரிட்டுள்ளேன். நன்றி. மீண்டும் சிந்திப்போம் சந்திப்போம். நன்றி !


என் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் செஞ்சிக்கு சேன்றபோது எடுத்த படம் அருகில் உள்ளது.

செஞ்சிப்பயணம் ஒரு சிறந்த வரலாற்றுப் பயணம். நாங்கள் பயனுள்ள வகையில் ஒரு நாளை அங்கு செலவிட்டோம். மாணவர்களுடன் மிகவும் ஆர்வத்துடன்யானைக்குளம், வெடிமருந்துக்கிடங்கு, தானியக்களஞ்சியம், வேங்கடரமண கோயில், மணி மண்டபம், பீரங்கிகள், குதிரை இலாயம், வீரர் அறைகள், கல்யாண மஹால், கமலகன்னியம்மன் கோயில், ஆகியவற்றைக் கண்டோம். மிகப்பெரிய ஆலமரங்கள் நல்ல நிழல் கொடுத்தன. நிறைய குரங்குகள் சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டின.



அடுத்து வருவது எங்கள் தஞ்சைச் சுற்றுலா
ஒரே நாளில் சமயபுரம், தஞ்சை, கல்லணை, திருச்சி, ஸ்ரீரங்கம், சமயபுரம், ஆகிய இடங்களுக்கு சென்று வந்தோம்.

சுவாமி மலை


சமயபுரம்
தஞ்சைப்பெரிய கோயில்கல்லணை
திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்
ஆகிய இடங்களுக்கு சென்று வந்தோம்.