Friday, May 1, 2009

புவி நாள் விழா-2009

புவி நாள் விழா-2009

எங்கள் பள்ளியில் ௨௨-௦௪-௨௦௦௯ அன்று "புவி நாள் விழா கொண்டாடப்பட்டது. புது டெல்லியில் உள்ள TERI என்ற சுற்றுசூழல் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க காகிதப்பைகள் தயாரிக்கும் நிகழ்ச்சியாக அமைத்திருந்தோம். மாணவர்கள் விருப்பமாக கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் திரு.கு.லோகநாதன் அவர்கள் பாலிதின் ஒழிப்பு பற்றிய உரை ஆற்றினார்.



நான் பாலிதின் பைகளுக்குப் பதிலாக காகிதப்ப்பைகளைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினேன். ஓவிய ஆசிரியர் திரு.தனராஜா அவர்கள் காகிதப்பைகளை செய்யும் முறைகளைக் கற்றுக்கொடுத்தார். மாணவர்கள் நுற்றுக்கும் மேற்பட்ட காகிதப்பைகளை செய்தனர். காகிதப்பைகளுடன் நடை அழகுப் போட்டியிலும் கலந்து கொண்டனர்.