Saturday, November 20, 2010

பட்டாசு மறுப்பு விழிப்புணர்வு விழா 2010

பட்டாசு மறுப்பு விழிப்புணர்வு விழா - 2010

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விளையாட்டுப் போட்டிகள்
எமது பள்ளியில் 0௩-௧௧-௨0௧0 அன்று பட்டாசு மறுப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது . இம்முறை பாண்டிச்சேரி ஆரோசிடி லயன்ஸ் கிளப்புடன் இணைந்து செயல்பட்டோம். பள்ளியின் பழைய ஆசிரியர் திரு டேனியல் அவர்கள் நான்கு வாலிபால் பந்துகளும் ஒரு வலையும் கிடைக்க ஏற்பாடு செய்தார். விழாவில் தலைமையாசிரியர், நான், மஞ்சுளா ஆசிரியை, ரமேஷ் ஆகியோர் உரையாற்றினோம். தனவந்தினி எந்திரன் பாட்டுக்கு குழு நடனம் ஏற்பாடு செய்திருந்தார்.
தீபாவளி அன்று விளையாட்டுப்போட்டிகள் நடத்தினேன். மாணவர்கள் பெருமளவில் வந்து கலந்து கொண்டனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

வீடியோ காண்க :

Thursday, November 18, 2010

Wednesday, November 17, 2010

உலக மக்கள் தொகை நாள் ௨0௧0


௧௯-௧0-௨0௧0, திங்களன்று உலக மக்கள் தொகை நாள் கொண்டாடப்பட்டது. சுற்றுசூல் சீரழிவிற்கு பெரிதும் காரணமாவது மக்கள் தொகை பெருக்கமே! விழிப்புணர்வின்மையே! என்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது. மாணவர்கள் நாடகம் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர் நான் (இரா.இளங்கீரன்) ஏற்பாடு செய்திருந்தேன். நான், ஆசிரியர்கள் இளங்கோவன், ரமேஷ், தனராஜா, மஞ்சுளா ஆகியோர் வழக்காடினோம்.

வீடியோ காண்க

Wednesday, March 24, 2010

உலக நீர் நாள் விழா

  • ௨௨-0௩-௨0௧0, திங்கள்அன்றுநல்லவாடுநடுநிலைப்பள்ளிவளாகத்தில்உலகநீர் நாள்விழா,
  • மரங்கள்அலங்கரிப்புமற்றும்தத்துகொடுப்புமற்றும்
  • எட்டாம்வகுப்பு மாணவர்க்குவழியனுப்புதல்
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.





தினமணி
செய்தி

உலக நீர் நாள் விழா

First Published : 24 Mar 2010 12:52:11 AM IST



புதுச்​சேரி,​​ மார்ச் 23:​ புதுச்​சேரி நல்​ல​வாடு அரசு நடு​நி​லைப் பள்​ளி​யில் உலக நீர் நாள் விழா திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​÷தே​சிய பசு​மைப் படை சார்​பில் இவ் விழா நடை​பெற்​றது.​ விழா​வில் பள்ளி தலை​மை​யா​சி​ரி​யர் ந.பர​ம​சிவ ஐயர்,​​ நீரின் தேவை மற்​றும் நீரை பாது​காக்​கும் முறை​கள் குறித்து பேசி​னார்.​÷வி​ழா​வில் மரங்​கள் அலங்​க​ரிப்பு மற்​றும் மரங்​களை தத்​துக்​கொ​டுத்​தல்,​​ 8-ம் வகுப்பு மாண​வர்​களை வழி​ய​னுப்​பு​தல் ஆகிய நிகழ்ச்​சி​க​ளும் நடை​பெற்​றது.​÷கு​டி​நீர் பற்​றாக்​குறை,​​ மரங்​கள் பாது​காப்பு குறித்த நாட​கங்​கள்,​​ குழுப்​பா​டல்​கள்,​​ கிரா​மிய நட​னங்​கள் நடை​பெற்​றது.​ தேசிய பசு​மைப்​படை பொறுப்​பா​சி​ரி​யர் ஆர்.இளங்​கீ​ரன்,​​ ஆசி​ரி​யர்​கள் கோ.இளங்​கோ​வன்,​​ ந.ரமேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்

http://www.thehindu.com/2010/03/25/stories/2010032552030200.htm

World water day fete in full flow

Staff Reporter

PUDUCHERRY: The Government Middle School at Nallavadu buzzed with activities on the occasion of World Water Day celebrations on March 22.

NGC's activities

The National Green Corps (NGC) of the school lined up a number of activities for students including decorating trees and adopting a tree as part of the celebrations, according to a press release.

A farewell programme was held for Class VIII students of the school.

The students decorated the trees in the school campus with colourful streamers, while Class VII students adopted the trees from the outgoing students, the release added.

Programmes

Skits, group songs and folk dances on shortage of drinking water and conservation of trees were staged by students on the occasion. Headmaster of the school N. Paramasiva Iyer spoke on the methods to conserve water.

Teachers Ilangovan and N. Ramesh spoke on the importance of World Water Day. NGC in-charge R. Elankeeran was present, the release said.


தட்பவெப்ப மாற்ற விழிப்புணர்வு விழா

௨௨-0௨-௨0௧0, திங்கள் கிழமை தட்பவெப்ப மாற்ற விழிப்புணர்வு விழா நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இவ்விழாவில்
  • கழிவற்ற நாள் கடைப்பிடித்தல்,
  • கடற்கரை மரக்கன்றுகள் பராமரிப்பு விழா,
  • படிம எரிபொருள் சேமிப்பு நாள் கடைப்பிடித்தல்,
  • பொம்மலாட்டம்,
  • பல்லுயிர்ப்பெருக்கப் பதிவேடு வெளியிடல்,
ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கழிவற்ற நாள் கடைப்பிடித்தல்
பள்ளியில் இப்படி ஒரு நாள் கடைப்பிடிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புகளில் ஒரு வகுப்புக்கு குழுக்கள் முறை முலம் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.கடற்கரை மரக்கன்றுகள் பராமரிப்பு விழா
இவ்விழாவின் பொது மாணவர்கள் நல்லவாடு கிராமத்தில் கடற்கரையில் உள்ள குட்டியாண்டவர் கோயில் தோப்பில் உள்ள மரககன்றுகளுக்கு நீர் ஊற்றுதல் முதலிய பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

படிம எரிபொருள் சேமிப்பு நாள் கடைப்பிடித்தல்
இந்தநாள் பள்ளி ஆசிரியர்களால் "வாகனமில்லா நாள்" ஆகக் கடைப்பிடிக்கப்பட்டது.
பள்ளியில் ஒருமணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டு "பூமி நேரம்" கடைப்பிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு எரிபொருள் செலவில்லாமல் இயற்கை உணவு தயாரிக்கும் முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களும் அறுபதிற்கும் மேற்பட்ட மாணவர்களும் இயற்கை உணவு உட்கொண்டனர். அந்த ஒருநாளில் சேமிக்கப்பட்ட படிம எரிபொருட்கள் , தடுக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைக் கணக்கிட்டு உரையாற்றப்பட்டது.
பொம்மலாட்டம்
"உட்டியாக்குவோம் உலகை" ன்ற தலைப்பில் கலைசங்கமம் நுண்கலைக்குழுவினர் பொம்மலாட்டம் நிகழ்த்தினர்.
பள்ளி மாணவர்கள் தயாரித்த "பல்லுயிர்ப்பெருக்கப்பதிவேடு" வெளியிடப்பட்டது.
மாணவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்து நாளிதழ் செய்தி கீழே
A school where awareness programmes are aplenty Staff Reporter

PUDUCHERRY: The Government Middle School at Nallavadu turned into a venue for scores of awareness programmes on environment conservation and climate change during a four-day environment awareness programme held recently.

The school organised the “No waste day” and awarded a rolling trophy to the “waste-free” class as part of the programme.

A drive to maintain the saplings along the shoreline was organised, during which students took up maintenance works including watering saplings along the Nallavadu village beach shore, according to a press release.

To reduce usage of fuel for a day, the school teachers observed “No Vehicles Day”. Power was cut-off for an hour in the school to signify the “Earth hour”. Training on preparing natural food was also imparted.

An awareness programme on climate change was conducted. “Nallavadu village biodiversity registry” was released on the occasion. Headmaster of the school N. Paramasiva Iyer was present, added the release.

It was organised by the National Green Corps of the school, CPR Environmental Education Centre, Chennai and State Training Centre, Puducherry.

Monday, November 30, 2009

பள்ளி வளாகத்தைப் பசுமையாக்கல்

பள்ளி வளாகத்தைப் பசுமையாக்கல்

௨௬-௧௧-௨00௯, வியாழன் அன்று எங்கள் பள்ளியில் பள்ளி வளாகத்தை பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் தேசியப் பசுமைப் படை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு.பரமசிவ ஐயர், நான், தமிழாசிரியர் திரு.மு.பிரனவகேஸ்கர், திரு.இளங்கோவன் ஆகியோர் மரங்களின் அவசியம் பயன்கள் பற்றி உரையாற்றினோம். ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளியிலும் அவரவர் வீடுகளிலும் மறக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளை புதுச்சேரி மாநிலப் பயிற்சி மையமும், ஈஷா யோக மையமும் இணைந்து மரக்கன்றுகளை வழங்கின. மறக்கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்படும் ன்றும் அறிவிக்கப்பட்டது.

Monday, September 28, 2009

ஓசோன் படலப் பாதுகாப்பு விழா

ஓசோன் படலப் பாதுகாப்பு விழா
௧௬-0௯-௨00௯ அன்று எமது பள்ளியில் மேற்கண்ட விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு .பரமசிவ ஐயர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நான் ஓசோன் படலம் அழித்தல் பற்றிய அறிவியல் விளக்கங்கள் அளித்தேன். நானும் ஆசிரியை தனவந்தினியும் சேர்ந்து ஓர் இன்னிசை நடனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆசிரியர்கள் தனராஜா, இரமேஷ், ஆசிரியைகள் ஆனந்தலட்சுமி மஞ்சுளா இந்துமதி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

படங்கள் சில:-மாணவர்கள் ஓசோன் மூலக்கூறுகள் குளோரோ புளோரோ கார்பனால் ஆக்சிஜனாக மாறும் வேதிவினையையும் சூரியனிடமிருந்து புற ஊதாக்கதிர்கள் வந்து மனிதனுக்கு தீந்கிழைப்பதையும் விளக்குதல்